சென்னை, ஆக,16-
சென்னை வடபழனியில் உள்ள எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் உள்ள மேலாண்மை துறையானது 15வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
துவக்கவிழாவில் துறைத் தலைவர் முனைவர்.சி.பிரசீதா வரவேற்றார்.. எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி எப்இடி கல்வி நிலைய துறைத்தலைவர், சி.வி.ஜெயக்குமார் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ஊக்க மளிக்கும் வகையில் பேசினார். மாணவர்கள் தங்கள் குறிக் கோளில் கவனம் செலுத்தி, அதை அடைய கடினமாக உழைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
எஸ். ஆர். எம் குழுவின் இயக்குனர் எஸ். ராமச்சந்தி ரன் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் தலைவர் ஹன்ஸ் ராஜ் வர்மா ஆகியோரும் பேசினர். முனைவர் எம். விஜயகுமார் நன்றி கூறினார்.