10 ஆண்டுகளுக்கு மேலாக பணி செய்து வரும் டிபிசி தொழிலாளர்களை தேர்தல் கால வாக்குறுதியின் படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும், டெங்கு மஸ்தூர் தொழிலாளர்களுக்கு சம்பந்தம் இல்லாத வேலையை செய்ய வற்புறுத்தக்கூடாது, கொரோனா தொற்று காலங்களில் பணி செய்த தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த ஊக்கத்தொகை ரூ. 15 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்ட டெங்கு கொசு ஒழிப்பு தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா. பாரி, பி.கணபதி, கமலக்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.