திருவண்ணாமலை, ஜன.7- சிஐடியு சங்கம் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு அடிப்படையில், டிபிசி தொழிலாளர்களுக்கு, தூய்மை பணியாளர்களுக்கு, ஊராட்சி ஒன்றியங்களில் நாளொன்றுக்கு ரூ. 533, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் நாள் ஒன்றுக்கு ரூ. 610 வழங்க வலியுறுத்தி, திருவண்ணாமலை ஆட்சியரிடம் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் மோயிஸ் ஆரோக்கியராஜ் தலைமை தாங்கி னார். கோரிக்கையை விளக்கி மாவட்டச் செயலாளர் பி. கணபதி, சிஐடியு மாவட்டத் தலைவர் காங்கேயன், செயலாளர் பாரி, பொருளாளர் ஆர். முரளி, நிர்வாகி தண்டபாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.