புதுச்சேரி, ஆக.31- புதுச்சேரி மாநிலம், பாகூர் பகுதியில் புதிய தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும். கிராமப்புற மாணவர்களுக்கு அரசு-கலை மற்றும் அறிவியல் கல்லூரியை பாகூரில் துவக்க வேண்டும். பாகூர் அரசு மருத்துவமனையை, சமுதாய நல மையமாக மாற்றிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் பாகூர் கொம்யூன் தலைவர் அஜித் குமார் தலைமை தாங்கினார். புதுச்சேரி மாநில தலைவர் கௌசிகன், செயலாளர் சஞ்சய் சேகரன், கொம்யூன் செயலாளர் ஜெயராஜ், நிர்வாகிகள் ரஞ்சித்குமார், சிந்து, பிரசாந்த் குமார், தனலட்சுமி, ஹரி பாரதி, திலகர், பாபு உட்பட திரளான வாலிபர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.