ஒன்றிய பாஜக அரசின் அக்னி பாத் திட்டத்தை கைவிடக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திங்களன்று ( ஜூலை 4) திருவள்ளூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் டி.மதன், பொருளாளர் கலையரசன், விதொச மாவட்ட நிர்வாகி கங்காதரன், சிபிஎம் நகர செயலாளர் உதய நிலா, ஏஐஒய்எப் மாவட்ட செயலாளர் செந்தில், துணை தலைவர் மோகன் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.