கொல்கத்தாவில் மருத்துவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், மருத்துவர் குடும்பத்திற்கு நீதி கேட்டும் காட்பாடியில் சிஐடியு, மாதர், வாலிபர், மாணவர், விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் ஆக்சிலியம் காலேஜ் ரவுண்டானா அருகில் ஆர்ப்பாட்டமும், கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது. மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.டி. சங்கரி துவக்கி வைத்தார். அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் பெ.அமுதா தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன், எம்.கணேஷ், செ.ஏகலைவன்,எல்.நவீன், பெ.திலீபன் தா.நேதாஜி, ஜி.கோவிந்தராஜ், வழக்கறிஞர் கனிமொழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.