நாடு முழுவதும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டு வரும் சங் பரிவாரத்தை கண்டித்து சனிக்கிழமையன்று (மே 7) வள்ளுவர் கோட்டம் அருகே தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை மக்கள் மேடையின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பி.சம்பத், பெ.சண்முகம் (சிபிஎம்), ஜவா`ஹிருல்லா (மமக), அபுபக்கர் (இந்திய யூனியன்முஸ்லீம் லீக்), பேரா.ஹாஜாகனி, தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் க.உதயகுமார் மற்றும் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.