districts

img

ஒன்றிய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி இளைஞர்கள் மாணவர்கள் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

ஒன்றிய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடல் தகுதி தேர்வில் வெற்றி பெற்று, எழுத்து தேர்வுக்காக காத்திருக்கும் 3 லட்சம் இளைஞர்களுக்கு உடனடியாக தேர்வு நடத்த வலியுறுத்தியும் இடதுசாரி இளைஞர்கள் மாணவர்கள் அமைப்பு சார்பில் செங்கல்பட்டில் இளைஞர் பெருமன்றத்தின் மாவட்டத் தலைவர் சேகுவேரா தாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில இணைச் செயலாளர் மபா.நந்தன், மாவட்டச் செயலாளர் க.புருசோத்தமன், மாவட்டத் தலைவர் ஜீவானந்தம், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மு.தமிழ்பாரதி, இளைஞர் பெருமன்றத்தின் மாநில செயலாளர் க.பாரதி, மாவட்டச் செயலாளர் பார்த்திபன், மாணவர் பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளர் வெங்கடேசன், புரட்சிகர இளைஞர் கழகத்தின் மாவட்டத் தலைவர் ராஜேஷ்குமார், புரட்சிகர மாணவர் கழகத்தின் மாநில தலைவர் பால அமுதன் உள்ளிட்ட பலர் பேசினர்.