பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு, சுங்கக் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்து திங்களன்று (ஏப்.4) தண்டையார்பேட்டை ஆர்டிஓ அலுவலகம் முன்பு ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பகுதிச் செயலாளர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு வடசென்னை மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், சங்க நிர்வாகிகள் காதர் உசேன், குமரன், திருநாவுக்கரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.