districts

img

தூய்மை பணி காவலர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

ஊராட்சிகளில் பணிபுரியும் டேங்க் ஆப்பரேட்டர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஒஎச்டி ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை பணி காவலர்கள் சங்கத்தின் சார்பில்  விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திங்களன்று (ஜன. 30) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாவட்டத் தலைவர் எம்.சரவணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.