districts

img

தமிழை அலுவல் மொழியாகக் கோரி  அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாகக் கோரி  அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் கடலூர் சாலையிலுள்ள புதுச்சேரி  நீதிமன்ற வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் புதுச்சேரி செயலாளர் வழக்கறிஞர்  சரவணன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு, புதுச்சேரி பார்கவுன்சில் தலைவர் குமரன் வாழ்த்திப் பேசினார்.