தமிழ்நாடு கடலோர பகுதிகளில் மீன்பிடி துறைமுகம் அருகில் சுமார் 500க்கும் மேற்பட்ட மீன்பிடித் தொழிலுக்கு உதவும் ஐஸ் உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன. ஆண்டுக்கு 8 மாதமே செயல்படும் தொழிலுக்கு நிரந்தர மின் கட்டணம் மற்றும் உச்சநேர மின் கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுக ஐஸ் உற்பத்தியாளர்கள் நலச் சங்கம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தலைவர் எம்.இ.ராஜா, பொதுச்செயலாளர் ஜோசப் ஜெகன், செயலாளர் சந்திரசேகரன், பொருளாளர் பா.வேந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.