சங்கம் வைக்கும் உரிமைக்காக போராடும் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக சிஐடியு கடலூர் மாவட்ட துணைத் தலைவர் என்.ஆர்.ஆர்.ஜீவானந்தம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் டி.பழனிவேல், மாவட்ட நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, தட்சிணாமூர்த்தி, பாபு, தேசிங்கு, திருமுருகன், சங்கமேஸ்வரன், ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.