புதுச்சேரி, ஜூலை 30- பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக் கோரி விவசாயிகள் சார்பில் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. புதுச்சேரியில் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ. 50 என உயர்த்தி வழங்க வேண்டும். 75 விழுக்காடு மானியத் தொகையில் மாட்டுத்தீவனம் ஆண்டு முழுவதும் வழங்க வேண்டும். பால் உற்பத்தியாளருக்கு தனி நல வாரியம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணா சிலை எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் இரகு. அன்புமணி தலைமை தாங்கினார். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.பெருமாள் துவக்கி வைத்தார். விவசாயிகள் சங்க புதுச்சேரி தலைவர் ராமமூர்த்தி, செய லாளர் சங்கர், பால் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் பத்மநாபன், முத்து, ஹரிதாஸ் முருகையன், சரவணன், சதா சிவம் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.