உள்துறை அமைச்சர் அமித்ஷா அவதூறாக பேசியதை கண்டித்து போளூர் சிபிஎம் வட்ட குழு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் களம்பூர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது. சிபிஎம் வட்ட செயலாளர் இரா.இரவிதாசன் தலைமையில் மாவட்ட செயலாளர் ப.செல்வன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். வீரபத்திரன், நிர்வாகிகள் இரா.சிவாஜி,அ.உதயகுமார், மாரிமுத்து,ப.ரவி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.