சிதம்பரம், டிச 21- வெள்ள நிவாரணம் கேட்டு ஜெயங் கொண்டம் மற்றும் காட்டுமன்னார்குடி சுற்று வட்டார பகுதி மக்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பகுதியில் கடந்தவாரம் ஒரே நாள் இரவில் 30 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்தது. இதனால் வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனையொட்டி ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் காட்டுமன்னார்குடி, குமராட்சி, வீரநத்தம், எள்ளேரி, திருநாரையூர், கீழ வன்னி யூர், மேல வன்னியூர், வீரநத்தம், வீரா ணம் ஏரிக்கு மேல் புறம் சித்தமல்லி, அறந்தாங்கி, பாபுத்தூர், அகர புத்தூர், மடப்புரம், வீராணம் நல்லூர், 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சூழ்ந்தது. இதனால் இப்பகுதியில் உள்ள வீடுகளும் விளை நிலங்களும் சேதமடைந்தன. இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு ரூ 5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், விளைநிலங்களுக்கு ஏக்க ருக்கு ரூ 30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காட்டுமன்னார்குடி வட்டாட்சியர் அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டச் செயலாளர் தேன்மொழி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், பிரகாஷ், குமராட்சி ஒன்றிய செயலாளர் மனோகர், மூத்த தலைவர் மகாலிங்கம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டு மழை வெள்ளத்தால் இறந்த கால்நடை மாடுகளுக்கு ரூ 40 ஆயிரம், ஆடுகளுக்கு ரூ 20 ஆயிரம், கோழிகளுக்கு ரூ 500 எனவும் முழுவதும் சேதமடைந்த வீடுகளுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் வீடு வழங்க வேண்டும் என்று முழக்கமிட்டனர். இதனைத் தொடர்ந்து, காட்டுமன்னார் கடி வட்டாட்சியரிடம் கோரிக்கை மனுவை வழங்கினார். அதை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் உறுதியளித்தார்.