சட்ட மாமேதை அம்பேத்கரை நாடாளுமன்றத்தில் இழிவாக பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையத்தில் சிபிஎம் தளி,கெலமங்கலம் ஒன்றிய குழுக்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தளி செயலாளர் ஆர்.நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சி.சுரேஷ்,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.சேகர், சி.பி.ஜெயராமன், மாவட்டக்குழு உறுப்பினர் இருதயராஜ், தேன்கனிக்கோட்டை வட்ட மூத்த உறுப்பினர் பி.நாகராஜ்ரெட்டி, வட்டத் தலைவர் புருஷோத்தமரெட்டி, கெலமங்கலம் செயலாளர் டி.ராஜா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.