வாரணாசியில் உள்ள கியான்வாபி பள்ளிவாலை அபகரிக்க முயலும் பயங்கரவாதத்தை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஜெ.ஹாஜாகனி தலைமையில் வெள்ளியன்று (மே 20) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், சிபிஐ மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் டி.எம்.மூர்த்தி, விசிக துணைப் பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டு பேசினர்.