திருப்பத்தூர் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் அனைத்து பிரிவுகளிலும் காலியாக உள்ள இடங்களை நிரப்பக் கோரியும், அவுட்சோர்சிங் முறையில் பணி அமர்த்தப்படுவதை தடுக்கக்கோரியும், தூய்மைப் பணியாளர்களுக்கு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சட்டப்படி ஊதியம் வழங்கக்கோரியும் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் மற்றும் துப்புரவு தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் நகராட்சி அலவலகம் எதிரில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் எம்.காசி, செயலாளர் எம்.சரவணன், சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் வி.குபேந்திரன் உட்பட பலர் பேசினர்.