ஆட்டோ தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு சிஐடியு சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு சிஐடியு மாவட்ட செயலாளர் இரா.பாரி தலைமை தாங்கினார், நிர்வாகிகள் பிரம்மா, வேடியப்பன், முபாரக் முன்னிலை வகித்தனர். ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளர் சரவணன், சிஐடியு நிர்வாகிகள் நாகராஜன், சேகர், கமலக்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்