அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக கோரி புதுச்சேரி காமராஜர் சிலை எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் சரவணன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம், பெருமாள், கொளஞ்சியப்பன்,சீனிவாசன், பிரபுராஜ், சத்தியா மூத்த தலைவர்கள் சுதா, தா.முருகன், மாநிலக் குழு உறுப்பினர்கள் ராமசாமி, சங்கர், இளவரசி இடைக்கமிட்டி செயலாளர்கள் ஜோதிபாசு,சரவணன், ராம்ஜி, ராமமூர்த்தி, அன்புமணி உள்ளிட்ட திரளானோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.