மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி வியாழனன்று ( பிப்.16) மத்தியசென்னை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் பரந்தாமன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், மாநில இணைச் செயலாளர் எஸ்.கண்ணன், செயற்குழு உறுப்பினர் கவுரி உள்ளிட்டோர் பேசினர்.