சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும், ஒன்றிய அரசு அறிவித்துள்ள 10 ஆயிரம் ரூபாய் கடன் தொகையை அடையாள அட்டை இல்லாத வியாபாரிகளுக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் வே. சங்கர், மாவட்ட குடிநீர் வடிகால் வாரியம் மாவட்டச் செயலாளர் கே.செல்வம், மலை சங்க மாவட்டச் செயலாளர் மாரிமுத்து, மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் பேசினர்.