கடலூர், ஜன.5- ஊரக வளர்ச்சித் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்பவும் அவுட்சோர்சிங் நடைமுறையை கைவிட கோரியும் கட லூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு தேர்வு நிலை ஊதியம், மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு, ஈட்டா விடுப்பு, வரை யறுக்கப்பட்ட ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட விடுபட்ட அனைத்து உரிமை களையும் வழங்க வேண்டும், மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தில் கணினி உதவியாளர் அனைவரையும் பணி வரன்முறைப்படுத்தி ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர் நிலை யில் திட்ட அலுவலர் ஏற்படுத்த வேண்டும், கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள் ஊரக மக்களின் நலன் கருதி பிரிக்க வேண்டும், இணை இயக்குநர், உதவி இயக்குநர் பதிவு உயர்வு வழங்க வேண்டும், வளர்ச்சித் துறை அலுவலகம் மீது திணிக்கப்பட்டு வரும் பணிகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.சண்முக சிகாமணி தலைமை தாங்கி னார். மாவட்ட துணைத் தலைவர் ஏ.ராஜேந்திரன், நிர்வாகிகள் பாலசுப்பிர மணியம், ஊரக வளர்ச்சி துறை மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் இரா. நடராஜன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.