புதுச்சேரி,ஆக.6- நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்க ளுக்கு அரசே நேரடியாக ஊதியம் வழங்க கோரி புதுச்சேரி சட்டப்பேரவை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி உள்ளாட்சித் துறையின் கீழ் இயங்கும் நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக் கும், ஓய்வு பெற்றவர் களுக்கும் ஊதியமும், ஓய்வூ தியமும் அரசே நேரடியாக வழங்க வேண்டும். 7 வது ஊதிய குழுவை 1.1. 2016 முதல் அமல்படுத்தி, நிலுவைத் தொகை வழங்க வேண்டும். 1.1.2004 பின் பணி நிரந்தரம் பெற்ற நகராட்சி ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி சட்டப் பேரவை அருகே நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகராட்சி பஞ்சாயத்து ஊழியர் சங்க தலைவர் வேளாங்கண்ணி தாசன் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன கவுரவ தலைவர் பிரேமதாசன் போராட் டத்தை துவக்கி வைத்து பேசினார். தலைவர் ரவிச் சந்திரன், பொதுச்செய லாளர் ராதாகிருஷ்ணன் நிர்வாகிகள் கிறிஸ்டோபர், ஆனந்தகணபதி, கலிய பெருமாள் நிர்வாகிகள் சகாயராஜ், ராஜா, பாலமுரு கன், ஆறுமுகம், கதிரேசன் உட்பட ஏராளமான ஊழியர்கள் பங்கேற்றனர்.