districts

img

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்...

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் எதிரில் சனிக்கிழமை மாவட்டத் தலைவர் நரேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஜெயந்தி, இந்திய ஜனநாயக வாலிபர் மாவட்ட செயலாளர் ஜீவானந்தம் ஆகியோர்  உரையாற்றினார்கள். நிறைவாக இந்திய மாணவர் சங்கத்தின்  மாவட்டச் செயலாளர் மு.தமிழ்பாரதி கண்டன உரையாற்றினார். இதில் மாணவர் சங்கம் மற்றும் வாலிபர் சங்க ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.