districts

img

சைகை மொழி பெயர்ப்பாளர்களை நியமிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டை, செப்.27-  பொது இடங்களில் சைகை மொழி பெயர்ப்பாளர்கள் நியமிக்ககோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மற்றும்  தமிழ்நாடு காது கேளாதோர் - வாய் பேசாதோர் உரிமை களுக்கான சங்கம் சார்பில் ராணிப் பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் புத னன்று (செப்.27) ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. உலக காது கேளாதோர் தினத்தை யொட்டி தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திற னாளிகள் நினைப்பதை மற்றவர்கள் பொது இடங்களில் பகிர்ந்து கொள்ள இயலாத சூழ்நிலை இருக்கிறது. தேவைகள் அல்லது கோரிக்கைகள் காவல்துறை, மற்ற அதிகாரிகளிடத்தில் கூறுவது அதி காரிகளுக்கு புரிவதில்லை. அதிகாரிகள், பொதுமக்கள் கூறுவது காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு பிரிவதில் சிரமம் ஏற்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் காது கேளாத, வாய் பேசாத மாற்றுத்திற னாளிகளுக்கு புரியக் கூடிய வகையில் சைகை மொழி பெயர்ப்பாளர் அனைத்து மாவட்டங்களிலும் பொது இடங்களில் நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.