பணி நிரந்தரம், அரசாணை 56ஐ அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சிதம்பரம் அருகே சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி அருகே மண்டலத் தலைவர் சக்திநாதன் தலைமையில் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கிளைச் செயலாளர் தேவேந்திரன், தலைவர் ரோஷினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.