அரசு மருத்துவர்களை பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்களுக்கான சட்ட போராட்டக் குழு தலைவர் பெருமாள் பிள்ளை தலைமையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசு கஸ்தூரிபா காந்தி தாய் சேய் நல மருத்துவமனை வளாகத்தில் புதனன்று (நவ. 20) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.