அரசாணை 115 மற்றும் 152 ரத்து செய்யக்கோரி சென்னை மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையர், மண்டல அலுவலகம் 5 முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வட சென்னை மாவட்ட துணைச் செயலாளர் நீதிதேவன் தலைமையில் வெள்ளியன்று (டிச. 2) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் ஜி.நித்தியராஜ், மாவட்டச் செயலாளர் எல்.பி.சரவணத்தமிழன், பொருளாளர் அ.விஜய், மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.அபிராமி, மாவட்ட நிர்வாகிகள் ச.முருகேசன், எஸ்.கார்த்திக், எஸ்.சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.