ஒன்றிய மோடி அரசு நீதிமன்றத்தில், மக்களவையில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியும், வாக்குறுதிகளை மீறி ஊழியர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதலைக் கண்டித்தும் பாதுகாப்புத் துறை ஊழியர்கள் 3ஆவது நாளாக நாடு முழுவதும் வெள்ளியன்று (டிச. 10) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒருபகுதியாக ஆவடியில் உள்ள படைத்துறை உடை தொழிற்சாலை யில் சம்மேளன பொதுச் செயலாளர் ஸ்ரீகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.