மணிப்பூர் வன்முறையை கண்டித்து வியாழனன்று (ஜூலை 27) புரசைவாக்கம் பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் எம். சிறீதர் சுப்ரமணியன். அகில இந்திய பிஎஸ்என்எல் டிஓடி ஓய்வூதியர் சங்க மாநிலச் செயலாளர் கே. கோவிந்தராஜ், ஒப்பந்த ஊழியர் சங்க மாநிலத் தலைவர் ஆர். அண்ணாமலை, ஓய்வூதியர் சங்க மாவட்ட பொருளாளர் பஞ்சவர்ணம், பிஎஸ்என்எல் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பி. ராஜ சுந்தரி உள்ளிட்டோர் பேசினர்.