districts

img

கடலூரில் கைத்தறி நெசவாளர்கள் 3 மையங்களில் ஆர்ப்பாட்டம்

கடலூர், ஜன.3- கைத்தறியில் ரக ஒதுக்கீடு சட்டத்தை உறுதியாக அமல்படுத்த கோரி கடலூர் மாவட்டத்தில் மூன்று இடங்களில் கைத்தறி நெசவு பாவு பட்டறை தொழிலாளர் சங்கம் சிஐடியு சார்பாக ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சட்டவிரோதமாக உற்பத்தி செய்யும் விசைத்தறிகளுக்கு வழங்கப்படும் மின்சார சலுகையை ரத்து செய்ய வேண்டும், ஒவ்வொரு ஆண்டும் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட கைத்தறி நெசவாளர் களுக்கு ஆறாயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், நெசவாளர்களுக்கு நெய்தல் கூலியில் இரண்டு விழுக்காடு போனஸாக வழங்க வேண்டும், போனஸ் சட்டத்தை இயற்ற வேண்டும். 1985 ஆம் ஆண்டு தமிழ் நாடு அரசால் நிறைவேற்றப்பட்ட நெசவாளர் நல சட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஓய்வூதியம் தொகையை ரூ. 5000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், கூட்டுறவு சங்கங்களில் 2022-23 நிதி ஆண்டில் தணிக்கை கணக்கை முடித்து போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி நடுவீரப்பட்டு, சான்றோர் பாளையம், புதுப்பேட்டை ஆகிய மூன்று மையங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளர் டி. பழனி வேல், கைத்தறி சங்கத்தின் மாவட்டச் செய லாளர் எஸ்.தட்சிணாமூர்த்தி, மாவட்டத் தலைவர் கல்யாணசுந்தரம், மாவட்டப் பொரு ளாளர் இ.தயாளன், மாவட்ட துணைத் தலை வர்கள் முருகன்,  ஆளவந்தார், இணைச் செயலாளர் ஜே.ராஜேஷ் கண்ணன், நிர்வாகிகள் கந்தசாமி, ராஜேந்திரன், குமார், அரங்கநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.