அருந்ததியர் சமுக மக்களை இழிவாக பேசிய சீமானை கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னனி வடசென்னை மாவட்டம் திருவிக நகர் பகுதி சார்பில் சனிக்கிழமை (பிப். 25) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் முருகேசன் தலைமை தாங்கினார். இதில் மாவட்டத் தலைவர் ராஜ்குமார், அமைப்பு சாரா பகுதி தலைவர் செல்வராஜ், மாதர் சங்க பகுதி தலைவர் தேவி, வாலிபர் சங்க பகுதி செயலாளர் சுரேஷ், ஆட்டோ சங்க செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.