சனாதனவாதி அமித்ஷாவை கண்டித்தும், அவர் உடனடியாக பதவி நீக்கம் செய்யக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரு.வி.க நகர் பகுதிக்குழு சார்பில் ஓட்டேரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் எல்.சுந்தரராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.கார்த்திஷ் குமார், மாவட்டக்குழு உறுப்பினர் வி.குப்புசாமி, பகுதி செயலாளர் வி. செல்வராஜ் ஆகியோர் பேசினர்.
டாக்டர் அம்பேத்கரை அவதூறாகவும், அவமரியாதையாகவும் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி வெள்ளியன்று (டிச.20) மதுரவாயல் ஏரிக்கரை சிக்னல் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்சென்னை மாவட்டக்குழு உறுப்பினர் வி.தாமஸ் தலைமையில் மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.சரவணசெல்வி உள்ளிட்டோர் பேசினர்.
சட்டமேதை அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி விலக வலியுறுத்தி வியாழனன்று (டிச.19) பல்லாவரம் அம்பேத்கர் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பல்லாவரம் பகுதித்தலைவர் ஹேமக்குமார் தலைமையில் தென்சென்னை மாவட்டத் தலைவர் எம்.ஆர்.சுரேஷ், மாநிலக்குழு உறுப்பினர் அ.ஜானகிதேவி, பகுதிச் செயலாளர் சிந்தன், மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.பாரதி, பகுதி ஒருங்கிணைப்பாளர் கமலேஷ் உள்ளிட்டேர் பேசினர்.
நாடாளுமன்றத்தில் அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி விலக வலியுறுத்தி வியாழனன்று (டிச.19) தரமணியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வேளச்சேரி பகுதித் தலைவர் ராகேஷ் தலைமையில் தென்சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் மகேஷ், பகுதிச் செயலாளர் குமரன், மாணவர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் சுர்ஜித், ஹரி உள்ளிட்டோர் பேசினர்.
புரட்சியாளர் அம்பேத்கரை இழிவுபடுத்தும் வகையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி நீக்கம் செய்ய கோரி வியாழனன்று (டிச.20) திருநீர்மலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் கிளைச் செயலாளர் எம்.இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பல்லாவரம் பகுதிக்குழு உறுப்பினர் எம்.சந்திரன் உள்ளிட்டோர் பேசினர்.
அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கர் குறித்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வெறுப்புணர்வு பேச்சைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பெரம்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் எல்.பி.சரவணத்தமிழன், மாநில துணைத் தலைவர் ஆர்.அபிராமி, மாவட்ட பொருளாளர் அ.விஜய், நிர்வாகிகள் புவியரசி, நா.விஜயகுமார், கார்த்திக், கு.சுரேஷ், எம்.நிதீஷ் ஆகியோர் பேசினர்.
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ , புரட்சிகர இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சிபிஎம் பொன்னேரி பகுதி செயலாளர் எஸ்.இ.சேகர் தலைமை தாங்கினார்.
அண்ணல் அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வெறுப்புணர்வு பேச்சைக் கண்டித்து அனைத்து கட்சி சார்பில் அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் பா.கருணாநிதி, ஏ.எஸ்.கண்ணன், பி.மாரியப்பன், ஆர் விஜயகுமார் (சிபிஐ), சி.சுந்தரராஜ், ஆர்.கோபி, கே.ரவிச்சந்திரன், ஜி.மூர்த்தி, எம்.பகத்சிங், கே.சீனிவாசன் (சிபிஎம்), தாமோதரன் (மதிமுக), அப்துல் ரகுமான், அபுபக்கர் (மனிதநேயமக்கள் கட்சி), அந்தோணி (விசிக) ஆகியோர் பேசினர்.
டாக்டர். அம்பேத்கரை இழிவாக பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி சிபிஎம் சார்பில் ஊத்துக்கோட்டை அருகில் தண்டலம் பஜாரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளை செயலாளர் எம்.செல்வராஜ் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர்செல்வம், ஜி.சம்பத், ஏ.ஜி.கண்ணன், மாவட்ட குழு உறுப்பினர்கள் ஏ.பத்மா, த.கன்னியப்பன், வட்டச் செயலாளர் என்.கங்கா, ஒன்றிய கவுன்சிலர் பி.ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
டாக்டர்.அம்பேத்கரை இழிவாக பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும், பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி சிபிஎம் சார்பில் கும்மிடிப்பூண்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட குழு உறுப்பினர்கள் இ.ராஜேந்திரன், காமாட்சி உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக வட்ட குழு உறுப்பினர் எம்.சிவகுமார் தலைமை தாங்கினார்.