ஏழை, எளிய நடுத்தர மக்களின் வயிற்றில் அடிக்கும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து வியாழனன்று (மார்ச்2) கோடம்பாக்கம் ரயிலடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆயிரம் விளக்கு பகுதிக்குழு உறுப்பினர் தி.சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.முருகேஷ், வெ.தனலஷ்மி, பகுதிச் செயலாளர் வெ.இரவீந்திரபாரதி, பார்த்தசாரதிபுரம் பெண்கள் கிளைச் செயலாளர் எம்.வசந்தி உள்ளிட்டோர் பேசினர்.
சமையல் எரிவாவு விலை உயர்வை கண்டித்து வியாழனன்று (மார்ச் 2) மூவரசம்பட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மூவரசம்பட்டு கிளைச் செயலாளர் முரளி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஆலந்தூர் பகுதிக்குழு உறுப்பினர் மோகன்ஜி, மூவரசம்பட்டு பெண்கள் கிளை செயலாளர் ஜான்சி உள்ளிட்டோர் பேசினர்.