ஆவின் பால் விலை உயர்வை கண்டித்து திங்களன்று (நவ.7) விருகம்பாக்கம் பகுதி, சூளைப்பள்ளத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பகுதிச் செயலாளர் டி.விஜயகுமாரி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், தென்சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.சரவணசெல்வி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தீ.சந்துரு, இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் ஆனந்த் உள்ளிட்டோர் பேசினர்.