districts

img

வீடுகளை இடிப்பது அரசின் வேலையல்ல! மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் சாடல்

சென்னை, ஜூன் 12 - அரசியலமைப்பு சட்டப்படி மக்க ளுக்கு வீடுகளை கட்டிக்கொடுப்பது தான் அரசின் வேலை. கட்டிய வீடுகளை இடிப்பதல்ல என்று மூத்த  வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் சாடியுள்ளார். சென்னை மாநகராட்சி 155 ஆவது வட்டத்திற்குட்பட்ட ராமபுரம்  திருமலை நகரில் சுமார் 700 வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பு சர்வே எண் 239/2ல் உள்ளது. இங்கு,  1994ஆம் ஆண்டு 276 குடும்பங்க ளுக்கு குடிசைமாற்று வாரியம் இடம் வழங்கியது. மேலும், 2001ஆம் ஆண்டு பாட்டை புறம்போக்கில் வசித்த 77 குடும்பங்களுக்கும் அரசு இடம் வழங்கியது. ஒரு சிலருக்கு வாரியம் விற்பனை பத்திரத்தை கொடுத்துள்ளது. ஒரு பகுதி வீடுகளுக்கு அரசு பட்டா கொடுத்துள்ளது. இதனையடுத்து பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத் தின் கீழ் சிலர் வீடுகளையும் கட்டி யுள்ளனர். 2019ம் ஆண்டு தொடரப் பட்ட ஒரு வழக்கை தொடர்ந்து, குடியிருப்புகளுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்தனர். குடியி ருப்புகளை அகற்றும் முயற்சியை அதிகாரிகள் கைவிட வேண்டும். குடியிருப்போருக்கே பட்டா வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், உயர்நீதிமன்றத் தில் வழக்கை நடத்தி வரும் மூத்த  வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத்,  வழக்கறிஞர் திருமூர்த்தி, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் உள்ளிட்டோர் ஞாயிறன்று (ஜூன் 12) திருமலை நகரில் கள ஆய்வு செய்தனர்.

என்.ஜி.ஆர்.பிரசாத்
இதனையடுத்து நடைபெற்ற ஊர்க்கூட்டத்தில் பேசிய மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத், “அரசாணை 62ன்படி மக்களுக்கு அரசு இடம் ஒதுக்கி உள்ளது. அரசிய லமைப்பு சட்டப்படி மக்களுக்கு வீடு கட்டித்தர வேண்டியது அரசின்  கடமை. கட்டிய வீடுகளை இடிப்பது  அரசின் வேலையல்ல. நீதிமன்றத் திடம் நிவாரணம் பெற்றுத்தர வேண்டி யது அரசின் பொறுப்பு. தேர்தல் நடத்துவது மட்டும் ஜனநாயகம் அல்ல. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதும், ஏழைகளுக்கு நிலம் கொடுப்பதும் ஜனநாயகத்தின் ஒரு பகுதி. களத்தில் மக்கள் போராடி னால்தான், நீதிமன்றத்தில் நாங்கள் வாதாட முடியும். போராட்டத்தை ஒரு போதும் கைவிடக்கூடாது” என்றார்.
ஆர்.வேல்முருகன்
தென்சென்னை மாவட்டச் செய லாளர் ஆர்.வேல்முருகன் குறிப் பிடுகையில், “சென்னையில் 203 குடிசைமாற்று வாரிய பகுதிகள் உள்ளன. இந்த நிலங்களை எடுத்து ரியல் எஸ்டேட் முதலாளிகளுக்கு கொடுக்க ஏதுவாக, நகர்ப்புற ஊரமைப்புச் சட்டம் உள்ளிட்ட 3  சட்டங்களை அரசு திருத்தம் செய்ய  உள்ளது. ஒன்றுபட்டு போராடு வோம். அரசின் சதியை முறியடிப் போம்” என்றார். இந்நிகழ்வின்போது கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், மதுரவாயல் பகுதிச் செயலாளர் வி.தாமஸ், கிளைச் செயலாளர் சாந்தி, ஒருங்கிணைந்த திருமலை நகர் வீட்டு உரிமை யாளர்கள் கூட்டமைப்பு தலைவர்  ரவி, போராட்டக்குழு ஒருங்கிணைப் பாளர் ஆர்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.