districts

img

சிதம்பரத்தில் வீடுகள் இடிப்பு சிபிஎம் தலையிட்டால் நிறுத்தம்

சிதம்பரம், ஜன.29- சிதம்பரம் நகரத்திற்கு உட்பட்ட குரு நமச்சிவாய கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கடந்த 50 ஆண்டு களுக்கு மேலாக 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகள் கட்டி குடியிருந்து வந்தனர்.  இதில் உள்ள வீடுகள் ஆக்கிரமிப்பு என்று நீதி மன்ற உத்தரவின் படி 30-க்கும் மேற்பட்ட வீடுகளை கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அகற்றி விட்டனர்.  இதில் 13 குடும்பங்களை சார்ந்தவர்கள் மேல்முறை யீட்டிற்கு உச்சநீதி மன்றத்திற்கு சென்றனர். அதில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்ட தன் பெயரில் இந்து அற நிலையத்துறையினர் வீடு களை அகற்றுவதற்கு பொக்லைன் இயந்திரம் மூலம் சம்பந்தப்பட்ட பகுதிக்கு வந்தனர். அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் எஸ்.ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.ராமச்சந்திரன், நகர் குழு உறுப்பினர்கள் சங்க மேஸ்வரன், மல்லிகா, அமுதா, திமுக கிளை செயலாளர் சரவணன்,  உள்ளிட்ட கட்சியினர் மற்றும் பொதுமக்கள்  இந்து அறநிலைய துறை யினரிடம் வீடுகளை காலி செய்ய அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று பிப்ரவரி 17ஆம் தேதி வரை வீடுகளை பொது மக்கள் அகற்றிக் கொள்ள வேண்டும் என அறநிலை யத்துறையினர் அவகாசம் வழங்கியுள்ளனர்.