விழுப்புரம்,பிப்.12 குடியிருப்புகள் அகற்றப்படுவதை நிறுத்தி விட்டு குடியிருப்புகள் கட்டப்பட்ட இடம் நீர் நிலை தானா என அறிய விசா ரணை குழு அமைக்க விக்கிரவாண்டி வட்டத்திற்குட்பட்ட டி.கொசபாளையத்தைச் சேர்ந்த 22 குடும்பத்தை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் திங்கள்கிழமை யன்று (பிப்.12) மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் மனு அளித்தனர். அதில் விக்கிர வாண்டி வட்டம், காணை ஒன்றியம், திருக்குனம் ஊராட்சியில் 5- தலைமுறை களாக வசித்து வருகிறோம். ஒன்றிய, மாநில அரசுகள் வீடு இல்லாத ஏழை களுக்கு வீடு கட்டி கொடுப்பது, இலவச வீட்டுமனை பட்டா வழங்குவது போன்ற பல்வேறு திட்டங்களை தொடர்ந்து அறி வித்து வருகிறது. மற்றொரு பக்கம் நீர்நிலைகளில் ஆக்கிரமித்துள்ளதாக வீடு களை இடிக்க ஒன்றிய ,மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. தேர்தல் நேரத்தில் அரசாங்கத்திற்கு அவப்பெயர் உருவாக்கும் நோக்கில் கிராமத்தில் உள்ள சிலர் வீடுகளை இடிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வரு கின்றன. சர்வே எண் 49/6., 78/2 என்ற இடத்தில் 5- தலைமுறைகளாக வசித்து வருகிறோம். எந்த காலத்திலும் இது வரையில் இந்த குடியிருப்பு இடத்தில் வெள்ளபாதிப்பு ஏற்பட்டதில்லை, இந்த இடம் கிராம கணக்கில் தவறுதலாக நீர்நிலை என பதிவாகி உள்ளது. இது நீர்நிலை என்பதற்கான தரவுகள் இல்லை என கூறப்படுகிறது. மேலும் அரசுகள் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு பிறப்பித்துள்ளதே தவிர டி. கொசப்பாளையம் கிராமத்தில் நீர் நிலை களில் இல்லாத வீடுகளை இடிக்க உத்தரவு பிறப்பிக்கவில்லை. எனவே 22 வீடுகளை இடிப்பதை நிறுத்தி விட்டு, நீர் நிலைதானா? என ஆய்வு செய்ய விசாரணை குழு அமைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரி வித்துள்ளனர்.