ராணிப்பேட்டை. ஜூலை 29 - ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வில் கால்சியா மற்றும் சிப்காட் பகுதி யில் கால்சியா (ஹீரோ டிவிஷன்) ஷூ கம்பெனிகள் உள்ளன. இரண்டு கம்பெனி களிலும் சுமார் 700 நிரந்தர தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதம் முடிவடைந்த நிலையில், புதிய ஊதிய ஒப்பந்தம் கோரி நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். தற்போது வரை நடைபெற்ற 7 சுற்று பேச்சுவார்த்தையில் எந்த சுமுகமான முடிவும் எட்டப்படவில்லை. இதையடுத்து செங்கொடி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் ராஜசேகர் தலைமை யில் கால்சியா ஷூ கம்பெனி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை சிஐடியு டேனரி மற்றும் ஷூ தயாரிப்பு செங்கொடி தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.பி.ராமச்சந்திரன் துவக்கி வைத்து பேசினார். நிர்வாகிகள் ஏ.தெய்வசிகாமணி, ஏ. ஸ்ரீதரன், ஆர்.கிருஷ்ணமூர்த்தி, கே.கதி ரவன், காவேரி, கவுரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதேபோல் சிப்காட் `ஹீரோ டிவிஷன் கம்பெனி முன்பு ஐவர் குழு உறுப்பினர் அருண் பிரசாத் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கிளை நிர்வாகிகள் ஏ.குழந்தைவேலு, ரவிக்குமார், டில்லி பாபு, ராதாகிருஷ்ணன், ஏழுமலை, வாலி பர் சங்க நிர்வாகி ஐ.கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.