வேலூர், ஜன.24- வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட செஞ்சி ஊராட்சி மன்றத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் சமத்துவ சுடுகாடு அமைக்க முடிவு செய்யப் பட்டது. இதற்காக கடந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, அதிகாரிகள் தேர்வு செய்த இடத்தில் அனைத்து சமூகத்தினரும் வாழ்ந்து வருவ தால் அங்கு அமைப்பது ஏதுவாக இருக்கும் என்று முடிவு செய்யப் பட்டது. இந்நிலையில், அப்பகுதி யில் வசிக்கும் குறிப்பிட்ட சிலர் சமத்துவ சுடுகாடு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பணிகளை செய்ய விடாமல் தடுத்து வந்தனர். இதையடுத்து, கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் லோ.ரவிச்சந்திரனை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காட்பாடி-கே.வி.குப்பம் தாலுகா செயலாளர் ஆர்.சுடரொளியன், செஞ்சி ஊராட்சி மன்றத் தலைவர் மல்லிகா ராஜேந்திரன் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர். இதில், சமத்துவ சுடுகாடு பணி களை விரைந்து முடித்து செயல் பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்திருந்தார். மனுவை பெற்றுக் கொண்டு பெருந்தலைவர், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இச்சந்திப்பின்போது சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சாமிநாதன், விவசாயிகள் சங்க செயலாளர் கணேஷ், மாவட்ட தலைவர் கோபால. ராஜேந்திரன், வாலிபர் சங்க நிர்வாகிகள் சங்கர், நவீன், குடியாத்தம் தாலுகா செயலாளர் எஸ்.சிலம்பரசன் ஆகியோர் உடனிருந்தனர்.