திருவள்ளூர், மே 4-
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகில் உள்ள பென்னாலூர்பேட் டையில் சன்னீஸ்வரன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் 200 க்கும் மேற்பட்ட வர்கள் வீடுகள் கட்டிக் கொண்டு வசித்து வருகின்ற னர்.
இந்த நிலையில் இங்கு சிலர் கோயில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாகவும், அதனை அகற்ற வேண்டும் என புகார் எழுந்துள்ளது.இதனை தொடர்ந்து ஊத்துக் கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உட்பட்ட வருவாய் ஆய்வாளர், சர்வேயர் ஆகியோர் நில அளவீடு செய்ததில். அந்த நிலம் கோயிலுக்கு சொந்த மான நிலமல்ல, பூண்டி ஒன்றிய சாலைக்கு உட்பட்டு இருக்கிறது.
இதில் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த மூன்று நபர்கள் மட்டும் தான் ஒரு வீடு, ஒரு கடை, இரண்டு கல்வெட்டுகள், ஒரு அரச மரம், சிறிய கோயில் என ஒன்றிய சாலையில் வருகி றது என நில அளவீடு செய்ததில் தெரியவந்துள் ளது. ஆனால் வருவாய்த் துறைனர் திட்டமிட்டு பொய் யான அறிக்கையை ஊத்துக் கோட்டை வட்டாட்சியருக்கு சர்வேயர் மற்றும் வருவாய் ஆய்வாளரும் அறிக்கை கொடுத்துள்ளனர்.
ஆனால் ஆதிதிராவிடர் வசிக்கும் அதே சர்வே எண்ணில் தான் உயர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 200 கும் மேற்பட்டவர்கள் அந்த நிலத்தை ஆக்கிர மித்து வீடுகள், கடைகள் போன்ற பல்வேறு கட்டங் கள் எழும்பி அனுபவித்து கொண்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து வட்டாட்சியரிடமிருந்து பெற்ற தவறான அறிக் கையை வைத்து பூண்டி வட்டார வளர்ச்சி அலுவ லர் ஆதிதிராவிடர் குடி யிருப்புகளை மட்டும் அகற்ற வேண்டும் என உத்தரவு பிறப் பித்துள்ளார். ஆக்கிரமிப்பு செய்தால் எல்லாவற்றையும் பாரபட்சமின்றி அகற்ற வேண்டும்.
சாதிய பாகு பாட்டுடன் செயல்படும் வரு வாய்த்துறையினர் மற்றும் பூண்டி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மாவட்டத் தலைவர் இ.எழிலரசன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் வழக் கறிஞர்கள் கே.சுதர்சனம், நரசிம்மன், இளங்கோவன், மகேந்திரன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலா ளர் ஆர்.தமிழ்அரசு ஆகி யோர் புதனன்று (மே-3), பூண்டி பிடிஒ விடம் மனு அளித்தனர்.