districts

img

ஓய்வூதியம் வழங்காமல் காலம் கடத்துவதா? கட்டுமான தொழிலாளர்கள்

திருவண்ணாமலை, டிச.16-  திருவண்ணாமலை மாவட்டத்தில் கட்டுமான மற்றும் சுமைப்பணி தொழிலாளர் கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு ஊதியம் கோரி பதிவு செய்தும், இதுநாள் வரை ஓய்வூதியம் வழங்காததை கண்டித்து, திருவண்ணாமலை மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் சங்கம், ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்கள் சங்கம் சார்பில் காந்தி நகர் நல வாரிய அலு வலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.  மாவட்டத் தலைவர் கே.நடராஜன் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் பாரி,  தையல் கலை சங்கத்தின் பொதுச் செயலாளர் எம்.வீரபத்திரன், கட்டுமான சங்க மாவட்ட பொது செயலாளர் கமலக்கண்ணன், ஆட்டோ சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.சரவணன், சிபிஎம் நிர்வாகிகள் எம்.பிரகலநாதன், எஸ்.ராமதாஸ்  ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதி யம் மாதம் ரூபாய் 3 ஆயிரம் வழங்க வேண்டும், கட்டுமான பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் உரையாற்றினார்.