districts

img

விஐடியில் மாற்றுத்திறனாளிகள் தின விழா 30 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

வேலூர், டிச. 3 - அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் 80 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3.01 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வே.இரா. சுப்புலட்சுமி, சட்ட மன்ற உறுப்பினர்கள் ஏ.பி. நந்தகுமார், ப.கார்த்திகேயன், அமுலு விஜயன், மாநகராட்சி மேயர் சுஜாதா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மு. பாபு, துணை மேயர் மா. சுனில்குமார், 1 வது மண்டல குழு தலைவர் திருமதி புஷ்பலதா வன்னிய ராஜா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், சாதாரண மனிதர்களை விட மாற்றுத்திறனாளி களுக்கு அதிகமாக அறிவு திறன் உள்ளது. எனவே அவர்கள் மற்றவர்களை விட அறிவு கூர்மை உடையவர்கள். கைத்தொழில்களில் அதிக ஆர்வம் உள்ள வர்கள். அதன் காரணமாக பல்வேறு தொழில்களை செய்ய ஊக்குவித்தால் அவர்கள் அதில் வெற்றி பெறுவார்கள் என்றார். பின்னர் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தமிழகத்தில் தற்போது புயலால் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு ஒன்றிய அரசிடம் நிதியையும் மற்றும் குழுவையும் அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளோம் என்றார். தமிழகத்தில் பாதிப்பு அதிகமாக இருப்பதால் கண்டிப்பாக ஒன்றிய அரசு  தமிழகத்தின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கும் என்று நம்புகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.