districts

img

சவுடுமணல் கடத்தும் லாரிகளால் உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து : பொதுமக்கள் புகார்

திருவள்ளூர், ஏப்.25- பொன்னேரி அருகில் சட்ட விரோதமாக சவுடு  மண் ஏற்றி வந்த லாரிகளால்  பொதுமக்கள் அவதிப்படு வதாக புகார் எழுந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட தடபெரும் பாக்கம் கிராமத்தில் உள்ள  ஏரியில் சாலை விரிவாக்க திட்டம் என்ற பெயரில் சட்டவிரோதமாக கனிம வள கொள்ளை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது, இங்கு விதிகளை மீறி 30 அடி ஆழத்திற்கு ஜேசிபி இயந்திரம் மூலம் ஏரியில் குழி தோண்டி நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் கள்ள சந்தையில் விற்பதற்காகவும் தனியார் நிறுவனங்களின் பயன் பாட்டிற்காக சவுடு மண் கொண்டு செல்வதால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து,  குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.   இது குறித்து வட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை விவசாயிகள் புகார்  அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் கனிம வள கொள்ளையர்க ளுக்கு துணை போவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இந்த நிலையில் செவ்வா யன்று (ஏப்.25)  ஏரியிலிருந்து சட்டவிரோதமாக சவுடு மண் ஏற்றி வந்த லாரி,  எதிரே ஜல்லி கற்களை ஏற்றி வந்த மற்றொரு லாரி சாலையோரம் இருந்த மின் கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் மின் கம்பம் உடைந்து.  அதனால் ஏற்பட்ட அதிர்வில், அதில் இணைக்கப்பட்டிருந்த உயரழத்த மின்கம்பிகள் ஒன்றின் மீது ஒன்று உரசி தீப்பொறிகள் ஏற்பட்டது. இதனால் வீடுகளில் இருந்த தொலைக்காட்சி மற்றும் குளிர்சாதன பெட்டி, மின்வி சிறி உள்ளிட்ட மின்சாதன  பொருட்கள் சேதம் அடைந்த தால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து குடியிருப்பு வாசிகள் கூறுகையில் சவுடு மண் ஏற்றி செல்லும் லாரிகளால் சாலைகள் சேதம் அடைவதோடு,  அப்பகுதி மக்களின் உயி ருக்கும் உடமைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக் கும் சட்டவிரோத கனிம வளக் கொள்கையை தடுத்து  நிறுத்துமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.