districts

img

கனமழையால் பூச்செடிகள் சேதம்

ஆம்பூர், மே 18- ஆம்பூரில் பெய்த கன மழையால் பயிர்கள் சேத மடைந்தது. ஆம்பூர் மற்றும் சுற்றுப் புற கிராம பகுதிகளில் கடந்த  3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ஆம்பூர் அருகே நாயக்கனேரி ஊராட்சி மலை கிராமங்க ளில் கனமழை காரணமாக  கானாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆம்பூர் கம்பி கொல்லை பகுதியில் உள்ள ஆணை மடுகு தடுப்ப ணைக்கு நீர்வரத்து அதி கரித்து தடுப்பணை நிரம்பி யது. உபரி நீர் வெளியேறி வருகிறது. நாயக்கனேரி மலை கிராமத்தில் பூக்கள், கேழ்வ ரகு, காய்கறிகள், நெற் பயிர்கள், கத்திரிக்காய், வெண்டைக்காய், தக்காளி பயிரிடப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக பெய்த கன மழை காரணமாக சுமார் 10க்கும் மேற்பட்ட கிராமங்க ளில் விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கி பயிர்கள் அழுகி சேதமடையும் சூழ்நிலை நிலவுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வருவாய்த் துறை, வேளாண் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை வேண்டும் என  அவர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.