காலமானார்
சென்னை, நவ.9- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினரும் செங்கொடி சங்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவருமான லஷ்மணய்யா இளையமகன் இ.எல்.ராஜூ சனிக்கிழமையன்று (நவ.9) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 63. அவரது உடல் எண் 8/7 பென்ஷனர்ஸ் குடியிருப்பு, 2ஆவது லைன், பழைய வண்ணாரப்பேட்டை, எச்1 காவல் நிலையம் எதிர்புறம். மின்ட் சென்னை 21. முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ராஜூ துணைவியார் நாகலட்சுமி, சகோதரி ஹேமாவதி உள்ளிட்ட அவரது குடும்பத்தாருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வடசென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.லோநாதன், கொளத்தூர் பகுதி செயலாளர் ஹேமாவதி, முருகேசன் உள்ளிட்ட சிஐடியு, வாலிபர்சங்கம், செங்கொடி சங்கத்தினர் மலரஞ்சலி செலுத்தினர். ஞாயிறன்று காலை 10.30 மணிஅளவில் மூலக்கொத்தளத்தில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.
சிலிண்டர் லாரி கவிழ்ந்து விபத்து: ஓட்டுநருக்கு காயம்
சென்னை, நவ. 9- மணலி நெடுஞ்சாலையில் சிலிண்டர் லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநர் காயம் அடைந்தார். திண்டிவனத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (43). சென்னையில் தங்கியிருந்து லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். வெள்ளியன்று அண்ணாசாலையில் இருந்து மணலி புதுநகர் அருகே கொண்டை கரையில் உள்ள நிறுவனத்தில் சிஎன்ஜி வாயுவை நிரப்புவதற்காக காலி சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு சென்றார். மணலி எம்எஃப் எல் சந்திப்பில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலை தடுப்பில் மோதியது. இந்த விபத்தில், இருக்கை யில் சிக்கிய ஜெய்சங்கர் வெளியே வர முடியாமல் தவித்தார். விபத்து காரணமாக போக்குவரத்து பாதித்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்குன்றம் போக்குவரத்து காவல் துறையினர், பொக்லைன் எந்திரம் மூலம் கவிழ்ந்து கிடந்த லாரியை நிமிர்த்தி சாலையோரமாக நிறுத்தினர். பின்னர் ஜெய்சங்கரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். அவருக்கு இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
பயிர் கடன் அளவு அதிகாரிகளுடன் ஆட்சியர் ஆலோசனை
ராணிப்பேட்டை,நவ.9- ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் 2025-26 ஆம் நிதி ஆண்டில் விவசாயிகள் பயிர் கடன் வழங்கும் அளவுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாநிலத் தொழில்நுட்ப குழுவிற்கு பரிந்துரை செய்வது தொடர்பாக பயிர்க்கடன் அளவு குறித்து விவசாயிகள் மற்றும் அரசு துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா புதனன்று (நவ. 6) ஆலோசித்தார். இதில் மத்திய கூட்டு றவு வங்கி மேலாண்மை இயக்குநர் ராமதாஸ், நேர்முக உதவியாளர் தபேந்திரன் (வேளாண்மை), துணை இயக்குநர் சீனி ராஜ், முன்னோடி வங்கி மேலாளர் ஸ்ரீ ராம்ஜி குமார், கால்நடை துறை உதவி இயக்குநர் ஜானகி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
சிபிஎம் கிளை மாநாடுகள்
கடலூர் மாவட்ட மின்னரங்க கிளை மாநாடுகள் நடைபெற்று தேர்வு செய்யப்பட்டு கிளைச் செயலாளர்கள்.
வேப்பூர் கிளை - கே. ராமமூர்த்தி.
திட்டக்குடி - ஏ.வீரராஜான்.
பெண்ணாடம் - எஸ். கோவிந்தசாமி.
விருத்தாசலம் - எஸ். செந்தில்குமார்.
விருத்தாசலம் டிஎல்சி - கே. குணசேகரன்.
பண்ருட்டி - எஸ். வெங்கடேசன்.
நெல்லிக்குப்பம் - ஏ.மகேஷ்.
நடுவீரப்பட்டு - கே.வெங்கடேசன்.
குறிஞ்சிப்பாடி - ஆர்.வடிவேலன்.
சேத்தியாத்தோப்பு - பி.ராமு.
சோழத்தரம் - எஸ். ரவிச்சந்திரன்.
திருமுட்டம் - என். கோவிந்தராசு.
யுபிஎஸ்சி தேர்வுக்கு தாட்கோ பயிற்சி: ஆட்சியர் தகவல்
விழுப்புரம், நவ.9- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் யுபிஎஸ்சி -2025 தேர்வுக்கு தாட்கோ மூலம் பயிற்சி வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் பழனி தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஆதிதிரா விடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) முன்னெடுப்பாக டாக்டர். அம்பேத்கார் அகாடமி மற்றும் சென்னையில் உள்ள முன்னணி பயிற்சி நிறு வனத்துடன் இணைந்து 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாண வர்களுக்கு ஒரு வருட காலம் யுபிஎஸ்சி தேர்வுக்கான (பொது அறிவு மற்றும் விருப்ப பாடங்கள்) முதல் நிலை முதன்மை நிலை பயிற்சியினை வழங்க வுள்ளது. யுபிஎஸ்சி தேர்வு எழுத தகுதியான மாணவர்களை ஸ்கிரீனிங் டெஸ்ட் மூலம் தேர்வு செய்து பின்னர் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு முதற்கட்டமாக தகுதியுள்ள 100 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியினை பெற பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் 21 முதல் 36 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும், இப்பயிற்சிக் கான கால அளவு ஒரு வரு டம் விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக் கான செலவு தொகை தாட்கோவில் மேற் கொள்ளப்படும். இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 20 ஆயிரம் பேருக்கு டெங்கு பாதிப்பு : சுகாதாரத்துறை
சென்னை, நவ. 9- தமிழ்நாட்டில் சுமார் 20ஆயிரம் பேர் டெங்குவால் பாதிக்க ப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. வரும் காலங்களில் பாதிப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க் கப்படும் நிலையில் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்கு னர் முக்கிய அறிவுறுத்தல் வழங்கி உள்ளார். தமிழ் நாட்டில் பருவமழையை ஒட்டி டெங்கு காய்ச்சல் பாதிப்பு கள் அதிகரித்து வருகின்றன. இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் 5ஆம் தேதி வரை 20,138 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரி வித்துள்ளது. இதில் உரிய நேரத்தில் சிகிச்சை பெறாத செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த சிறுமி உட்பட 8 பேர் உயிரிழந்துள் ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதமும், அடுத்த மாதமும் டெங்கு பாதிப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்க ப்படுவதாக கூறியுள்ள மக்கள் நல்வாழ்வுத்துறை, அதன் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருவ தாகவும் கூறியுள்ளது. இதனிடையே டெங்கு காய்ச்சல் அதிகரித்துவருவதால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மனையில் காய்ச்சலுக்கான சிறப்பு வார்டு திறக்கப் பட்டுள்ளது. 50 படுக்கைகள் கொண்ட இந்த வார்டில் 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம், தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுடன் பருவகால தொற்றும் தீவிரமடைந்து வருவதாக தெரி வித்துள்ளார். இருமல், தொண்டை அலர்ஜி, காய்ச்சல், உடல் சோர்வு, உடல்வலி, தலைவலி, சளி, வாந்தி, வயிற்று ப்போக்கு உள்ளிட்டவை ஏற்பட்டால் அலட்சியப்படுத்தாமல் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என்று பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார். பொது இடங்க ளுக்கு செல்லும் மக்கள் 3 அடுக்கு முகக்கவசம் அணிய லாம் என்றும் செல்வ விநாயகம் கூறியுள்ளார்.
மழைநீரை உடனுக்குடன் அப்புறப்படுத்த நடவடிக்கை- மேயர் பிரியா தகவல்
சென்னை,நவ.9- சென்னையில் அடுத்து வரும் சில நாட்கள் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறி வித்துள்ளது. இதையடுத்து சென்னை நகரில் வெள்ளம் தேங்காமல் தடுக்கும் நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சனிக்கிழமையன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சென்னையில் சமீபத்தில் 2 நாட்கள் பெய்த மழையால் சில பகுதிகளில் தண்ணீர் தேங்கியது கண்டறியப்பட்டுள்ளது. 24 மணி நேரத்திற்கும் மேலாக மழைநீர் தேங்கும் பகுதி கள் கண்டறியப்பட்டு இனிவரும் நாட்களில் தண்ணீரை விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு சில பகுதிகளில் மோட்டார்கள் மூலம் மழைநீரை அப்புறப்படுத்த வேண்டிய நிலை உள்ளது. அங்கு மோட்டார்கள் அமைத்து மழைநீர் உடனடியாக வெளியேற்ற ப்படும். இதற்காக மாநகராட்சி தயார் நிலையில் இருக்கி றது. இவ்வாறு அவர் கூறினார்.