districts

img

இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு:

சென்னை,ஏப், 7 கடந்த ஆண்டில் மட்டும் இணைய வழி திருட்டு மூலம் டில்லி அருகே உள்ள குருகிராமில் வாழும் பொதுமக்கள் ரூ.300 கோடியை இழந்துள்ளனர். இதுதொடர்பாக 30,000 வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில இணைய வழி திருட்டு தொடர்பாக விழிப்புணர்வு பிரச்சாரத்தை விவோ சைபர் போலீசாருடன் இணைந்து துவக்கி உள்ளது.  இதன் முக்கிய நோக்கம்  இணையப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், குருகிராமில் வசிப்பவர்கள் இணைய அச்சுறுத்தல்களுக்கு எதிராக எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதாகும் என்று விவோ தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் 1930 என்ற கட்டணமில்லா உதவி எண் வாயிலாக புகார் கொடுக்கலாம்.