கடலூர் மாநகராட்சி பள்ளி வகுப்பறையை மேயர் செவ்வாயன்று ஆய்வு செய்யும்போது வகுப்பறை முழுவதும் குப்பையாக காட்சியளித்தது. இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் வருவதற்கு காலதாமதமானதால் அருகாமையில் இருந்த துடைப்பத்தை கொண்டு வகுப்பறை முழுவதும் மேயரே சுத்தப்படுத்தினார். இதனைப் பார்த்த மாநகராட்சி சுகாதார அலுவலர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் செய்வதறியாமல் திகைத்து நின்றனர்.